Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓய்வு பெறப்போகிறார் தினேஷ் கார்த்திக்.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!!

Sekar Updated:
ஓய்வு பெறப்போகிறார் தினேஷ் கார்த்திக்.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!!Representative Image.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட்-கீப்பர்  பேட்ஸ்மேனாக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். அவர் தனது கிரிக்கெட் பயணத்தை 2004-ஆம் ஆண்டு தொடங்கினார். ஆரம்ப கட்டத்தில் இவருக்கு சரியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 

அதற்கு ஒரு காரணமாக இவருடன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் சிறந்த ஆட்டம் கூறப்படுகிறது. அதே சமயம் தினேஷ் கார்த்திக் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட போதெல்லாம் இந்திய  அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாது தொடர்:

தினேஷ் கார்த்திக் ஐ.பி.ல் தொடரில் தான் இருந்த அனைத்து அணிகளுக்காகவும் சிறப்பாக விளையாடி வந்தார். முக்கியமாக கொல்கத்தா அணியின் கேப்டனாக அந்த அணியை சிறப்பாக வழி நடத்தினார். இவரது கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய போட்டியாக  ரசிகர்களால் கூறப்படுவது "நிதாஸ் கோப்பை 2018" இறுதி போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிராக இந்திய அணியை திரில் வெற்றியடையச் செய்தது தான்.

தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கை கனவாக இருப்பது, தனது நாட்டிற்காக உலகக்கோப்பை தொடரில் ஆடுவது தான்  என்று பல ஊடகங்களில் கூறியுள்ளார். இவர் தனது கனவை நிறைவேற்றுவதற்காக பல ஆண்டுகளாக முயன்று வந்தார். 2019 உலகக்கோப்பை தொடரில் இவர் ஆடிய பிறகு, அத்தோடு தினேஷ் கார்த்திக் காலம் முடிந்தது என பேசப்பட்டது.

எனினும், கடந்த ஐபில் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தினால் தனது 37-வது வயதில் டி-20 உலககோப்பை அணியில் இடம்பெற்றார். அதிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா :

உலகக்கோப்பை  தொடருக்கு பின்னர் தினேஷ் கார்த்திக்கு எந்த போட்டியிலும் இடம் கிடைக்காத நிலையில் 
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது உலகக்கோப்பை கனவு நினைவானதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியென்றும், இது தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்றும் மேலும் தனது பயணத்தில் உறுதுணையாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா என்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதற்கு தினேஷ் கார்த்திக் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்