ஷுப்மான் கில் தனது ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார் என்று நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜிடி 8 கோடி ரூபாய்க்கு ஷுப்மன் கில்லை குஜராத் டைட்டன் வாங்கியது.
ஐபிஎல் 2022 சீசனில் அறிமுக அணியாக நுழைந்து தனது முதல் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் வென்று மற்ற அனைத்து அணிகளுக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஷுப்மான் கில்லும் ஒருவர். கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் அதிகபட்சமாக 96 ரன்களுடன் மொத்தம் 483 ரன்கள் எடுத்தார். இதில் 4 அரைசதங்களுடன் அடங்கும்.
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் மொத்தம் 487 ரன்கள் எடுத்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக, ஷுப்மன் கில் உள்ளார். மேலும் இருவருக்குமான ரன் வித்தியாசமும் பெரிய அளவில் இல்லை.
இதனால், அடுத்த சீசனில் ஷுப்மன் கில்லை, அதிகபட்ச தொகை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துக் கொள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் குஜராத் அணியிலிருந்து விலகியுள்ளதுகுஜராத் அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், திடீரென விலகியுள்ளது டைட்டன்ஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…