இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான Jio சென்ற வாரம் தமிழ்நாட்டில் 6 நகரங்களில் jio 5g சேவையை தொடங்கி வைத்தது. அதை தொடர்ந்து ஜனவரி 17 2023 முதல் 16 நகரங்களில் 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 4G சேவையை விட பன்மடங்கு வேகம் கொண்ட 5G தற்போது இந்தியாவில் 134 நகரங்களில் செயல்படுகிறது.
ஜனவரி 17 2023 அன்று 16 புதிய நகரங்களில் Jio 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 16 நகரங்களில் திருப்பூர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்த நகரமாகும். ஆந்திரா மாநில காக்கி நாடா, கர்னூல் நகரங்கள், கர்நாடக மாநில ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக்பேத்தகிரி மற்றும் அசாம் மாநில சில்சார் நகரம் உட்பட 16 நகரங்களில் 5G சேவையை Jio ஆரம்பித்தது.
5G ஆரம்ப சேவை ஆஃபராக 239 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் Jio வாடிக்கையாளர்களுக்கு 1Gbps வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டா பேக் இலவசமாக வழங்கப்படுகிறது. Jio 5G சேவௌ இந்தியாவில் டேட்டா பயன்பாட்டின் வளர்ச்சியாக இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…