ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக ரீடெய்ல் ஸ்டோரான Apple BKC-ஐத் தொடங்க உள்ளது. இந்த ரீடெயில் ஸ்டோர் ஆனது, நாளை அதாவது ஏப்ரல் 18 ஆம் நாள் மும்பையில் தொடங்க உள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, “இந்தியாவில் தொடங்கப்படுவது நம்ப முடியாத ஆற்றல் இருப்பதாகவும், நீண்ட கால வரலாற்றை உருவாக்க உற்சாகமாக இருப்பதாகவும்” கூறினார்.
மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்டு டிரைவ் மாலில் இந்த ரீடெய்ல் ஸ்டோர் திறக்கப்பட உள்ளது. பாந்த்ரா குர்லா வளாகம் ஆனது, பாந்த்ரா கிழக்கில் அமைந்துள்ளது.
மேலும் இதில் Apple iPhone-ஐத் தவிர, Mac, AirPods, Apple watch, Apple TV மற்றும் AirTag போன்றவை இருக்கும். மும்பையைத் தவிர ஆப்பிள் தனது இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்க திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதியானது 5 பில்லியன் டாலர்களைத் தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…