ட்விட்டர் ஓனரான எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பால், ட்விட்டர் பயனாளர்கள் பரபரப்பில் காணப்படுகின்றனர்.
ட்விட்டர் நிறுவனம் கை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் எலான் மஸ்க். அதன் படி, சமீபத்தில் ட்விட்டரில் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, செய்தி நிறுவனங்கள், தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க ட்விட்டர் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது அடுத்த மாதம் முதல் செயலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், மாதாந்திர சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் சந்தா செலுத்தாதவர்கள் தான் விரும்பக் கூடிய ப்ரீமியம் செய்திக்கு அதற்கான கட்டணத்தை செலுத்திப் படிக்கலாம். ஆனால், மாதந்திர சந்தாவில் பதிவு செய்யாதவர்கள் செய்தி படிக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதே போல, சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெறுவதுடன், நீண்ட ட்வீட்களைப் பதிவிடலாம். தேவைப்பட்டால் அதை எடிட்டிங் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…