ட்விட்டர் விரைவில் தங்கள் பதில்களில் விளம்பரங்களுக்காக சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு [content creators] பணம் செலுத்தத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் முதல் கட்டணத் தொகையாக சுமார் 5 மில்லியன் டாலர் வழங்குவதாக எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை அன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்னர், பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இவரின் வருகைக்கு பின்னர் ட்விட்டரின் 75% ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டார். இதற்கு பின்னர் கோகோ கோலா, ஜீப், யூனிலீவர், மெர்க் மற்றும் வெல்ஸ் பார்கோ ஆகியோருடன் சுமார் 625 விளம்பரதாரர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ட்விட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் விளம்பரதாரர்களைத் தக்க வைக்க ட்விட்டர் நிறுவனம் போராடி வருகிறது. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சுமார் 4.5 பில்லியன் டாலர் விளம்பர வருவாய் இழப்புக்கு வழிவகுத்தது.
இந்த பிரச்சனையை ஈடுகட்ட எலான் மஸ்க், சூப்பர் பவுல் 'ஃபயர் சேல்' சலுகையை நடத்துவது மற்றும் விளம்பரதாரர்களின் பாதுகாப்பற்ற அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கத்துடன் விளம்பரங்கள் தோன்றினால் அவர்களைத் தூண்டும் பிராண்ட் பாதுகாப்பு பிரச்சாரத்தில் பங்கேற்பது போன்ற சில நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் NBCUniversal இன் மூத்த நிர்வாகி ஜோ பெனாரோச்சை வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் முயற்சியில் ஈடுபடுவதால் கூடிய விரைவில் ட்விட்டர் நிறுவனத்தின் நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…