கொட்டாவி வருவது என்பது அனைவருக்கும் சாதாரணமானது தான். ஆனால், அதை வைத்து நிறைய சொல்லலாம். ஒருவர் கொட்டாவி விடும் போது மற்றவர்களுக்குப் பரவுவது என்பது உண்மை. கொட்டாவி வரும் போது கண்களில் தண்ணீர் வருவதற்கு சில காரணங்களும் உள்ளன.
கொட்டாவி வருவதற்குக் காரணம்
நம் உடல் அசந்து, சோர்வடையும் போது கொட்டாவி வரும். நடைமுறையில் இது எல்லோரும் உணரக் கூடிய ஒன்று. நாம் சில மூச்சு விடும் போது குறைவான ஆக்ஸ்ஜனையே எடுத்துக் கொள்ளக்கூடும். அந்த நேரத்தில் நாம் சலிபடையக் கூடும். அந்த சமயத்தில் நாம் கொட்டாவி விடும் போது அதிகப் படியான ஆக்ஸிஜனை உள்ளிழுப்போம். மேலும், இது இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடை உடலிலிருந்து வெளியேற்றும்.
தூண்டுதல் தன்மை
கொட்டாவி விடும் போது, கண்களில் நீர் கசிவதற்கு தூண்டுதல் தன்மையே காரணமாகிறது. கொட்டாவி விடும் சமயத்தில் அதிகப் படியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இது கண்ணின் மேற்பகுதியில் நீராக மாறி வருகிறது.
கொட்டாவி விடுவதால் ஏற்படும் நன்மைகள்
நாம் கொட்டாவி விடும் போது கொடுக்கும் அழுத்தமே கண்களில் நீர் வழிய காரணம் ஆகும். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், இது கண்கள் வறண்டு போகாமல் இருப்பதைத் தடுக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…