வாழ்வதற்காக வேலை செய்து பணம் சம்பாதிப்பது மாறி இப்ப கடினமாக வேலை செய்து பணம் சம்பாத்திப்பதையே வாழ்க்கையாக மாற்றி உள்ளனர். இதனின் விளைவாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனை செல்லும் வழக்கத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அதில் இருந்து வெளிவர பல வழிமுறைகள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்றால், வேலை சுமை காரணமாக அதையும் தாண்டி வேலை செய்ய வேண்டியுள்ளது. இதில் ஊழியர்கள் தங்களை சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ள இடையில் சிறிது நேரம் Nap அதாவது தூக்கம் எடுத்துக்கொள்ளலாம், கொஞ்ச நேரம் வெளியே சென்று நடந்துவிட்டு வரலாம் போன்ற நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது எந்த அளவிற்கு அவர்களுக்கு உபயோகமாக இருக்கிறது என்று தான் தெரியவில்லை.
இதற்கு தான் சரியான டிவைஸ் ஒன்றை சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ளது. அது தான் 'Balance Mouse' இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், நான் செட் செய்திருக்கும் டைம் ஆன உடன் அந்த மவுஸ் வேலை செய்வதை ஆட்டோமேட்டிக்காக நிறுத்திவிடும். இதனால் ஊழியர்கள் தங்களின் ஷிஃப்ட் நேரத்தை தாண்டி அவர்களால் வேலை செய்ய முடியாது. சரி அதனால் என்ன அதையும் தாண்டி வேலை பார்க்க முடியாதா? என்று நீங்கள் கேட்டால் இதோ பாருங்கள். நீங்கள் உதாரணத்திற்கு 8 மணி நேரத்தை தாண்டி வேலை செய்தால் அந்த மவுஸ் குட்டி எலியாக மாறி ஓட்டம் பிடித்துவிடும்.
இதனால் நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காந்த படி வேலை செய்யவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்த டிவைஸ் முற்றிலும் பணியாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…