தொழிநுட்ப வளர்ச்சிக்கு பின்பு மனிதர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களால் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் அந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு தான் தங்களின் ஆராய்ச்சியை தொண்டங்கியதாக கூறப்படுகிறது. அப்படியாக 1400 ஆண்டுகளுக்கு முன்பு குரான் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை 20 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததை இப்பொது பார்க்கலாம்.
1. நாம் இப்போது பயன்படுத்தும் இரும்பானது பூமியில் இயற்கையாக கிடைக்கும் பொருள் அல்ல. இது விண்வெளியில் இருந்து வெடித்து சிதறிய வின்கற்கள் தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அந்த வின்கற்களில் இரும்பு இருந்ததால் அது பூமியை தொடும் போது வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குரானில் அத்தியாயம் 57, 25 ஆவது வரியில் சொல்லப்பட்டுள்ளது. அதில் " மனிதர்களின் நன்மைக்காக நாங்கள் இரும்பை பூமிக்கு மிகப்பெரிய சக்தியாக அனுப்பியுள்ளோம்".
2. குரானில் 78 ஆம் அத்தியாயம், 6 மற்றும் 7 வரிகளில் " நாங்கள் பூமியை உங்களுக்கு ஓய்வு எடுக்கும் இடமாகவும், மலைகளை திடமாகவும், கூர்மையாகவும் தரவில்லையா?" என்று உள்ளது. அதாவது பூமியின் ஆளமான பகுதியில் வேர்களாக மலைகள் இருப்பது என்று அர்த்தம். இதனை சில வருடங்களுக்கு முன்பு புவி இயற்பியலாளர் Frank Press தன்னுடைய "The Earth" என்னும் புத்தகத்தில் கூறியுள்ளார்.
3. இயற்பியலாளர் Stephen Hawkings தன்னுடைய "A Brief History of Time" புத்தகத்தில் விண்வெளி விரிவாக்கத்தைப் பற்றி கூறுகிறார். மேலும் இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி குரானில் 51 ஆவது அத்தியாயத்தில் 47வது வரிகளில் "நாங்கள் தான் விண்வெளியை எங்கள் படைப்பின் சக்தியாக உருவாக்கியுள்ளோ, அதை விரிவடையவும் செய்ய இருப்போம்" என்று சொல்லப்பட்டுள்ளது. இது டெலெஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு முன்பே சொல்லப்பட்டது தான் மிகவும் ஆச்சர்யமான ஒன்று.
4. 1512 ஆம் வருடம் வானியலாளர் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்பவர் சூரியன் அசையாமல் இருப்பதாகவும், கிரகங்கள் தான் அதனை வட்ட பாதையில் சுற்றுவதாக கூறியுள்ளார். இதனை 20 ஆம் நூற்றாண்டு வரை அனைத்து விஞ்ஞானிகளும் நம்பினர். பின்னர் கண்டுபிடித்தது, சூரியன் அதனுடைய இடத்தில் இருந்து சுற்றுவதாகவும், மற்ற கிரகங்கள், நிலவு, நட்சத்திரங்கள் தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனை வட்ட பாதையில் சுற்றுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குரானில் 21 ஆம் அத்தியாயம் 41 வது வரியில் " நாங்கள் தான் இரவையும் பகலையும் படைத்தது - சூரியனையும், சந்திரனையும் தன்னை தானே மிதந்த படி வட்ட பாதையில் சுற்றிவர வைத்துள்ளார்" என்று சொல்லப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…