உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் வகிப்பவர் எலான் மஸ்க். இவர், பிரபல டெஸ்லா வாகன தயாரிப்பின் நிறுவன தலைவராவார். இவர், தனது நிறுவனமான டெஸ்லாவின் மூலம், அதிநவீன புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளார்.
அதாவது, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தாலோ ஆல்ட்ரோ என்ற இடத்தில், செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியில், எலான் மஸ்க், “ஆப்டிமஸ்” என பெயரிடப்பட்டுள்ள புதிய நவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார்.
இவர் அறிமுகம் செய்த “ஆப்டிமஸ்” என அழைக்கப்படும் ரோபோவானது, கண்காட்சியில் பார்வையாளர்களை நோக்கிக் கையசைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பேசிய எலான் மஸ்க், “ஆப்டிமஸ்” ரோபோவின் சிறப்பியல்புகள் குறித்து கூறினார். இது தனது நீண்ட நாள் கனவு என குறிப்பிட்டுள்ளார். அதாவது, குறைவான செலவில் அதிக திறன்கள் கொண்ட ரோபோக்களைத் தயாரிக்கக் கூடிய தனது கனவு நினைவாகி இருப்பதாக கூறினார். இந்த வகை ரோபோக்கள், அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எலான் மஸ்க் இந்த ரோபோவை இந்திய மதிப்பீட்டில் 16 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…