60 வயது முதியவர் ஒருவர், ஆந்திரா அமைச்சர் ரோஜாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட சம்பவம் நகைச்சுவை ஏற்ப்படுத்தியது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் திட்டங்கள் கடைக்கோடி வரை சென்றடைகிறதாக என்பதற்காக அமைச்சர்கள் அனைவரும் வீடு, வீடாக சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆந்திரா சுற்றுலா தல அமைச்சரும், நகரி எம்.எல்.ஏவும் ஆன ரோஜா , புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்துக்குப் போனார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று நலம் விசாரித்து வந்தார்.
அப்போது 60 வயது முதியவரை சந்தித்த ரோஜா, அரசு உதவித்தொகை கிடைக்கிறாத என விசாரித்தார். மேலும் உங்கள் மனைவி என்ன செய்கிறார் என்றும், எத்தனை குழந்தைகள் உள்ளன என்றும் கேட்டார். அதற்கு உடனடியாக பதிலளித்த முதியவர், அது தான் எனக்கு பிரச்சனை, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைக்கேட்டதும் சிரித்த ரோஜா, அரசு தொடர்பான பிரச்சனைகள் என்றால் என்னால் தீர்த்து வைக்க முடியும், உங்களுடைய பிரச்சனையை என்னால் எப்படி தீர்த்து வைக்க முடியும் என சிரித்தபடி அடுத்த வீட்டை தேடி நகர்ந்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…