விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி காவல்துறையினர் ராஜபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வெங்கடேஷ் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், ராஜபாளையத்தை சேர்ந்த சந்தனம் மற்றும் கோட்டை ஊரை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா மற்றும், இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…