வங்கதேசத்தில் வடக்கு மாவட்டமான பஞ்சகர் எனும் பகுதியில் ஒரு படகில் ஏராளமானோர் சென்றுள்ளனர். ஆனால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
இந்த திடீர் விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என கூறப்படுகிறது. படகில் போதிய பாதுகாப்பு இல்லாமையும் அதிக சுமை இருந்ததாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில் மீதம் இருப்பவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…