திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால், இன்றைய காலை நிலவரப்படி இந்த முறை பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருப்பதி கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழா மிகச் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தைக் காண அதிக அளவிலான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவர். அதே போல, அதிக அளவிலான பக்தர்கள் கூட்டம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய காலை நிலவரப்படி, இன்று எதிர்பார்க்கப்பட்ட பக்தர்கள் கூட்டம் இல்லை எனக் கூறப்பட்டது. அதிக கூட்டத்திய எதிர்பார்த்து, 300 சிறப்பு நுழைவு தரிசனம் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான முன்னுரிமை தரிசனங்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், ஒன்பது நாள்களுக்கான டிக்கெட்டுகள் வழங்குவதும் நிறுத்தப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…