அரசியல் கட்சிகளின் உடனான கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பது குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உடனான கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டு, இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் பற்றிய தகவல்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியனின் நியமனம் குறித்தும் அதில் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…