மின்கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் களம்பாளையம் வண்ணான் தோட்டத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமாகியதாக உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…