Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பஞ்சு ஆலையில் பயங்கர தீ விபத்து; ரூ.2 கோடி நாசம்

Bala June 03, 2022 & 16:31 [IST]
பஞ்சு ஆலையில் பயங்கர தீ விபத்து; ரூ.2 கோடி நாசம்Representative Image.

மின்கசிவு காரணமாக  பஞ்சு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் களம்பாளையம் வண்ணான் தோட்டத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமாகியதாக உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்