சதுரகிரி மலையில் ஏற்ப்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்பு படையினர் பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை ம் வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது. இதற்காக கடந்த 25ம் தேதி பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம்ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி மலையில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். இதனையடுத்து திடீரென பெய்த மழையால் அங்கு காற்றாற்று வெள்ளம் ஏற்ப்பட்டது. இதன் காரணமாக மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மலையில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இதற்காக தயார் நிலையில் வைக்கப்படிருந்த சுமார் 300 போலீசார் மற்ரும் மீட்பு படையினர் பக்தர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…