கொடைக்கானலில் மலர் கண்காட்சியை இன்று அமைச்சர்கள் தொடங்கி வைக்கவுள்ளனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று தொடங்கவுள்ளது. இதனை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, எம்.மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கவுள்ளனர். இந்த கண்காட்சி இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சியை முன்னிட்டு ஏராளமான மலர்களை கொண்டு டைனோசர் மற்றும், மயில், வெள்ளை பூண்டு ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…