Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மக்களே உஷார்.. நீர் வரத்து அதிகரிக்கலாம்...!

Bala August 04, 2022 & 19:08 [IST]
மக்களே உஷார்.. நீர் வரத்து அதிகரிக்கலாம்...!Representative Image.

காவிரி ஆற்றில் நீற் திறப்பு அதிகரிக்கப்படலாம் என்பதால் கரையோர மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்து  வாங்கி வருவதால், மாலை 4 மணி நிலவரப்படி பிலிக்குண்டுவில் தமிழகம் வரும் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 15ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து காவிரி ஆற்றில் 2 இலட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் காவிரிக் கரையில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனைதொடர்ந்து கரையோர மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்