ஒலி மாசுபாட்டைக் குறைக்க மும்பை மாநகராட்சி புதுமையான முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி இன்று (28ம் தேதி) மாலை 5 மணி முதல் 7 மணி வரை வாகன ஓட்டிகள் ஹாரன்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, வாகன உற்பத்தியாளர்களிடம் ஹாரன்களின் ஒலியைக் குறைக்குமாறு மும்பை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனைதொடர்ந்து மும்பை போக்குவரத்து போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் #SayNoToNoisePollution என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி தற்போது மும்பையில் எழுப்பப்படும் ஹாரன் ஒலி அளவு 92 முதல் 112 டெசிபல் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…