12 அதிவேக படகுகளை ராஜ்நாத் சிங் வியட்நாமிடம் ஒப்படைத்தார்
100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்பட்ட 12 அதிவேக பாதுகாப்பு படகுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாமிடம் ஒப்படைத்தார். வியட்நாம் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று ஹாங்ஹா கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விழா ஒன்றில் இந்த அதிவேக படகுகளை ராஜ்நாத்சிங் வழங்கினார். முதல் ஐந்து படகுகள் இந்தியாவில் உள்ள L&T கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது மற்றும் மீதமுள்ள ஏழு ஹாங் ஹா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இந்தியா மற்றும் வியட்நாம் இடையே இன்னும் பல கூட்டுறவு பாதுகாப்பு திட்டங்களுக்கு இது முன்னோடியாக இருக்கும் என்றும்
இந்தத் திட்டம் எங்களின் 'மேக் இன் இந்தியா - மேக் ஃபார் தி வேர்ல்ட்' பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என அவர் கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான நாடான வியட்நாம், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுடன் மோதல்களை சந்தித்து வருகிறது. தென் சீனக் கடலில் உள்ள வியட்நாம் கடல் பகுதியில் இந்தியா எண்ணெய் ஆய்வுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவும் வியட்நாமும் கடந்த சில வருடங்களில் பொதுவான நலன்களைப் பாதுகாப்பதற்காக கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…