சேலத்தில் பெய்த மழை காரணமாக சாயக்கழிவு நுரை சூழ்ந்து திருமணிமுத்தாறு காட்சியளிக்கிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வனக்கி வருகிறது. அதன்படி சேலம் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் சாயக்கழிவு நுரை சூழ்ந்து திருமணிமுத்தாறு காட்சியளிக்கிறது. ஆள் உயரத்திற்கு நுரை தேங்கியிருப்பதால் ஆத்துக்காடு பகுதியில் தரைப்பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நுரை காரணமாக துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
புகழ் பெற்ற திருமணிமுத்தாறு ஆக்கிரமிப்புகளால் ஏற்கனவே கழிவுநீர்க்கால்வாயாக மாறி அடையாளம் தெரியாமல் போனது. இந்த நிலையில் சாயக்கழிவுகளும் கலப்பதால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…