திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்த பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து
உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தற்கொலை செய்து கொண்ட திருவள்ளூர் பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது. திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மாணவி மரணம் தொடர்பான வழக்கை டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து பள்ளியை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…