வெளியான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. அதில், தமிழக அளவில் கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அள்விலும் முதல் 4 இடங்களையும் மாணவிகளே கைப்பற்றியுள்ளனர். இதில் அகில இந்திய அளவில் மொத்தம் 685 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுவாகவே மத்திய அரசு பணிகள் தொடர்பான விபரங்கள் தெரியாததால் மத்திய அரசு பணிகளில் தமிழகத்தினர் விண்ணப்பிப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு பணிகள் தொடர்பான மாணவ, மாணவிகளுக்கு தமிழக போதிய விழிப்புணர்வு வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…