சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகை மிரட்டி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை தொற்ரு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கேரளாவில் இரண்டு பேருக்கு குரங்கம்பை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லைகளில் சோதனை தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன்படி, கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது என்றும், இதுவரை தமிழ்நாட்டில் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…