தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்,
இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…