மூதாட்டியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியைச்சேர்ந்த மாதையன் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். வர் நேற்று முன் தினம் புல் போதையில் இருந்த போது அதேபகுதியை சேர்ந்த மூதாட்டியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் இதனால் அதிருபதியடைந்த மூதாட்டி போதை ஆசாமியிடம் சண்டை போட்டுள்ளார். கேட்டது கிடைக்காததால் விரக்தியடைந்த மாதையன் அருகில் இருந்த இரும்பி கம்பியால் மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மாதையனை விரட்டி, மூதாட்டியை மீட்டனர். இதனையடுத்து மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாதையினை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தான் புல் போதையில் தெரியாமல் நடந்து கொண்டதாகவும் தன்னை மண்ணித்து விடுமாறு கெஞ்சியுள்ளார். இதனை கண்டுகொள்ளாத போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…