மேற்கு தொடர்சி மலைகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அசானி புயல் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்சி மழை பகுதிகளில் பெய்த மழையால், மணிமுத்தாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்து 55 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடி அதிகரித்து 70.73 அடியாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…