நம் முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது என்று வகுத்து இந்த மாதம் இந்த காரியம் செய்ய உகந்தது எனக் கூறுவர், பொதுவாக நாம் ஆடி மாதம் சுப காரியம் செய்யக் கூடாது என நினைப்பது உண்டு, ஆனால் ஆடி மாதம் மகத்துவம் வாய்ந்த மாதமாகும்.
ஆடி பிறப்பு (Aadi Perukku Festival)
சூரியன் வடதிசை மற்றும் தென்திசை நோக்கி நம் பூமி மீது தன் பார்வை வைக்கும், இது வருடத்திற்கு ஒருமுறை இருகாலமும் மாறும் திருநாளே ஆடி பிறப்பு திருநாளாகும். இந்த திருநாளை இந்து சமயத்தில் நாம் பண்டிகையாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.
பொதுவாக ஆடி மாதம் முதல் பூமி வெப்ப காலம் முடிந்து குளிர்ச்சி அடைய தொடங்கும், இந்த தருணம் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு உகந்த தருணமாக அமைவதால் நம் முன்னோர்கள் ஆடி பிறப்பைத் திருநாளாகப் பார்த்தனர்.
ஆடி திருநாள் சிறப்பு (Aadi Pirappu Sirappu)
நம் தமிழ் பாரம்பரியம் விவசாயம் அது சார்ந்த பண்டிகைகளை மேற்கொண்டதாகும், தை திருநாள் அறுவடைக்கு நன்றி சொல்லும் திருநாள் என்றால் ஆடி திருநாள் விவசாயப் பணிகள் தொடங்கும் மகத்துவமான நாளாகும், முக்கியமாக மரம் நடுதல் மற்றும் விதை விதைத்தல் போன்ற காரியம் சிறப்பாகும்.
ஆனால் காலபோக்கில நாகரீக வளர்ச்சியில் நம் பாரம்பரியம் மறைந்து வட இந்திய பண்டியான தீபாவளி முக்கியமான திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.
ஆடி பிறப்பு பலகாரம் (Aadi Perukku Palagaram)
தமிழனின் பண்டிகையில் உணவு ஒரு முக்கியத்துவம் இருக்கும், அந்த வகையில் ஆடி திருநாள் சிறப்பு தின்பண்டம் பனங்கட்டி சேர்த்த சுட்ட தேங்காய் ஆகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…