சிவனின் ஆலயம் பல பிரபஞ்சத்தில் அனைத்திடத்திலும் இருந்தாலும் ஒவ்வொரு ஸ்தலத்துக்கு தனி சிறப்பு உண்டு, அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு சிவ ஆலயம் நம் தமிழகத்தின் தலை நகரமான சென்னையின் மையத்தில் அமைந்துள்ளது, அதைப் பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தில் இத்திருத்தலத்தின் சிறப்பு காணலாம்.
அப்படி என்ன சிறப்பு?
சென்னையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலே (Ekambareswarar Temple) நாங்கள் குறிப்பிடும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் ஆகும், சுயம்பு மூர்த்தியாக சிவ பெருமான் காட்சி அளிப்பதே இத்திருத்தலத்தின் முக்கியமான சிறப்பாகும்.
மேலும், பார்வதி தேவி இத்தலத்தில் அம்பாள் சிவனின் சக்தி அடக்கம் என்பதை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது, இதை வெளிக்காட்டும் வகையில் அம்பாள் ஆவுடையார் தோற்றம் உள்ளது.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு சிவ சன்னதி முன் வலப்புற தூணில் சிவ ஆஞ்சநேயராக இருப்பதும், அம்மன் சன்னதிக்கு முன் இருக்கும் நவக்கிரக மண்டபமும் ஆகும். இந்த நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனி பகவான் அம்மனின் நேரடி பார்வையில் இருப்பது, சனியின் உக்கிரம் குறைந்திருக்கக் காரணமாகக் கருதப்படுகிறது.
விநாயகர் இல்லாத ஆலயம் என்பதில்லை, இத்திருக்கோயிலில் (Ekambareswarar Temple) உள்ள விநாயகர் வன்னிமர விநாயகர் ஆவார். முக்கியமான சிறப்பாக அமைவது நம் கையால் பாலாபிஷேகம் செய்யும் அரசமர அடியிலிருக்கும் லிங்கமே ஆகும். இதற்கு நம் கையில் பாலாபிஷேகம் செய்து வில்வ இலையால் பூஜை செய்யலாம்.
இத்திருக்கோயிலில் செய்யும் பிரார்த்தனைகள் எதற்கு?
உடனுக்குடன் ஆன்மீக செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…