Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Say Gayatri Mantra in Tamil: தினமும் காயத்ரி மந்திரத்தை இப்படி சொன்னால் தான் பலன் கிடைக்குமா....?

Manoj Krishnamoorthi July 08, 2022 & 10:40 [IST]
How to Say Gayatri Mantra in Tamil: தினமும் காயத்ரி மந்திரத்தை இப்படி சொன்னால் தான் பலன் கிடைக்குமா....?Representative Image.

சுகமான வாழ்வை அனைத்து தரப்பு மக்களும் விரும்புவர், சுகமான வாழ்வு என்றால் செல்வ செழிப்போடு வாழும் வாழ்க்கை மட்டுமல்ல சந்தோஷமான மனநிலை, ஆனந்தமான குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்து சௌபாக்கியமும் ஆகும்,இந்த சகல சௌபாக்கியமும் நம் வாழ்வில் நிறைந்திருக்க இந்த மந்திரத்தை சொன்னால் போதும்....! அது என்ன மந்திரம் அதை பற்றி அறிய வேண்டுமா எங்கள் பக்கத்தைப் பின்தொடருங்கள்.

காயத்ரி மந்திரம் (Gayathri Manthram Tamil)

சப்த சிரஞ்சீவிகள், 27 நட்சத்திரங்கள், அஷ்ட சித்திகளையும் பெற மகாலட்சுமியின் கடாட்சம் பொருந்திய இந்த காயத்ரி மந்திரத்தைத் தினமும் சொல்லி வர ஏற்படும் நன்மைகள் ஏராளம் ஆகும்.

இந்த மந்திரத்தைத் தினமும் முழுமனதுடன் பக்தியுடன் சொல்லி வர நமக்கு கிடைக்கும் மன அமைதி நம்மைத் திறம்பட செயல்பட நமக்கு ஒரு நல்ல ஆற்றலை தரும். மேலும் இந்த மந்திரத்தைத் தினமும் சபித்து வந்தால் நம் நம் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டுப்போகும், அதுமட்டுமின்றி நம் மனமறியாது செய்த பாவங்களும் நம்மை விட்டு அகலும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.  

ஓம் பூர் புவ ஸுவ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோந ப்ரசோதயாத்

முக்கியமாக இந்த மந்திரத்தை தினமும் மூன்று வேளை சொல்வது மிகசிறப்பாக அமையும். காலையில் உச்சரிப்பது காயத்ரி தேவிக்கும், பகலில் சாவித்ரி தேவிக்கும், மாலை சரஸ்வதி தேவிக்கும்  இந்த மந்திரம் கூறும் நேரத்தை பொருத்து அமையும்.

எப்படி சொல்ல வேண்டும்?

காலையில் எழுந்த பின் கிழக்கு திசையில் நின்று சூரிய தேவரை வணங்கி பின் மந்திரத்தை சொல்லலாம்.

மதிய வேளையில் கிழக்கு பக்கம் பார்த்தபடி அமர்ந்து கைகளை மார்புக்கு எதிரே கூப்பி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

மாலை வேளையில் மேற்கு திசையைப் பார்த்து அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாகக் கூப்பி வைத்து உச்சரிக்க வேண்டும்.

எத்தனை முறை சொல்ல வேண்டும்?

நம் மனதில் கடவுளை நினைத்து பக்தியுடன் ஒரு முறை கூறினால் நற்பலனை பெறலாம், இருப்பினும் காய்த்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்வது மிக சிறப்பாகும்.  

உங்கள் மனம் பயபயக்கும் ஆபத்து காலத்திலும் காய்த்ரி மந்திரம் சொல்லலாம், இந்த மாதிரியான நேரத்தில் குறைந்தது 10 முறையாவது சொல்லும்போது மனதிற்கு தைரியம் கிடைக்கும்.    

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்