நாம் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் வாழ்வில் முன்னேற முடியவில்லை.... அடிமேல் அடி விழுவதுபோல வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் தவிக்கிறீர்களா......ரொம்ப கஷ்டப்படு ஒரு அடி வைத்தால் அது இரண்டடியாக சறுக்குகிறதா.... அப்போ முருகனை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி பாருங்க உங்க வாழ்க்கையில் முன்னேற்றம் தடை நீங்கி நடக்கும்.
முருக மந்திரம் (Murugan Manthiram)
நாம் அறியாத பல நிகழ்வுகள் நம் அன்றாட வாழ்வில் நடக்கிறது, ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு மகத்துவம் என்பதை நம் ஏற்றுகொள்ள வேண்டும். முருகனின் பிரணவ மந்திரமான 'ஓம்' என்னும் சொல் சக்தி வாய்ந்த மந்திரமாக இருப்பது மகத்துவமே ஆகும். அதுபோன்ற மகத்துவம் நிறைந்த மந்திரத்தைக் கீழ்க்காணுவோம்,
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
இந்த மந்திரத்தை முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானை நிலையில் நிறுத்தி 6 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு இந்த மந்திரத்தை முருகனை மனதில் நினைத்து சொல்லி வர துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றும்.
இப்படி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மந்திரத்தை சொல்லி வர நீங்கள் கண்ட அவமானங்களை கடக்கும் தைரியம் உங்களுக்கு பிறக்கும். அந்த தைரியம் நல்ல செல்வாக்கு மற்றும் மரியாதை கிடைத்து நல்வாழ்வு வாழ முடியும்.
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…