Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்க மந்திரம்.. எப்படி சொல்ல வேண்டும்? | Rahu Ketu Moola Mantra in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்க மந்திரம்.. எப்படி சொல்ல வேண்டும்? | Rahu Ketu Moola Mantra in TamilRepresentative Image.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேது ஒருவரது ஜாதகத்தில் நிலை கெட்டிருக்கும்போது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, கேது பகவான் சனி பகவானின் அம்சம் நிறைந்தவராக இருப்பதால் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். தற்போது ராகு - கேதுவால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி பார்க்கலாம். 

ராகு மூல மந்திரம்: 

ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே
ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா

எப்படி சொல்ல வேண்டும்?

மிகவும் சக்தி வாய்ந்த ராகு பகவானின் இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், ராகு பகவானை மனதில் நினைத்துக் கொண்டு 108 முறை அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். மேலும், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வருகின்ற ராகு கால நேரத்தில் அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று, நவகிரக சன்னதியில் இருக்கும் ராகு பகவானுக்கு சிறிதளவு குதிரை கொள்ளு சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி இந்த மூல மந்திரத்தை துதித்து வந்தால் ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படுகின்ற தோஷ பாதிப்புகள் குறையும். 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். நம்முடைய வாழ்க்கையில் இடையூறு செய்யும் தீய குணமுடைய நபர்கள் விலகுவார்கள். எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். நீண்ட நாட்களாக கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்கும்.

கேது மூல மந்திரம்: 

ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ருர ரூபிணே கேதவே ஐம் 
ஸெள: ஸ்வாஹா

எப்படி சொல்ல வேண்டும்?

கேது பகவானுக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் 9 அல்லது 27 முறை துதிக்க வேண்டும். மேலும், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று, நவகிரக சன்னதியில் உள்ள கேதுவின் சிலைக்கு சங்கு பூக்களை வைத்து, உளுந்து சமர்ப்பித்து, இந்த மந்திரத்தை 108 முறை கூறி வழிபடுவதால் பிற உயிரினங்கள் குறிப்பாக பாம்புகளை கொன்றதால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

நெடுநாட்களாக இருக்கும் நோய்ப்பிணி நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இருந்துவந்த தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த நிதி சிக்கல்கள் நீங்கும். எதிர்பாரா உதவிகளும், நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்