தைப்பூசம் என்றாலே தை மாதத்தில் பௌர்ணமியும் பூசம் நட்சத்திரம் ஒன்றாக இணைவது தான். இந்த நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக விளங்குகிறது. தைப்பூச நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேகம், ஆராதனை, அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் என வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் முருகனை நினைத்து விரதம் இருந்தால், திருமணத்தடை விலகி விரையில் திருமணம் கைகூடி வரும். இவ்வளவு சிறப்புமிக்க நாளில் வீட்டில் ஒரு குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வைப்பதன் மூலம் பணப்பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை அனைத்தும் விலகும்.
உங்கள் வீட்டில் ஏற்கனவே கல் உப்பு இருந்தாலும் சரி, தைப்பூசத்தன்று புதிதாக கல் உப்பு வாங்கி வையுங்கள். அடுத்தது பச்சரிசி வாங்கி வைப்பதன் மூலம் பணக்கஷ்டம் விலகும். மஹாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உங்க வீட்டில் வேல் இருந்தால் எலுமிச்சை பழத்தை புதியதாக வாங்கி அதில் செருகி வையுங்கள். இல்லையென்றால் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி இரண்டாக நறுக்கி அதில் ஒரு பாதியில் குங்குமத்தையும், மற்றொரு பாதியில் மஞ்சளையும் தடவி வாசற்படியில் இரண்டு பக்கமும் வையுங்கள். இப்படி செய்வதால் கெட்ட எண்ணங்கள் விலகி நல்லது நடக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…