Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருவாதிரை சிறப்பு தரிசனம்: சங்கர ராமேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

KANIMOZHI Updated:
திருவாதிரை சிறப்பு தரிசனம்: சங்கர ராமேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!Representative Image.

மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா நடராஜர் கோலத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் தமிழக முழுவதும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் உடனூறை  பாகம் பிரியாள் ஆலயத்தில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 

 பின்னர் சுவாமி நடராஜர் கோளத்தில் அம்பாளுடன் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நடராஜர் கோலத்தில்  எழுந்தருளிய  சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கும் நடராஜருக்கும் முதலில் பசு தீபாராதனை நடைபெற்றது.

 

 பின்னர் நடன தீபாராதனை நடைபெற்றது இந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்