Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Veetil Santhosam Peruga Pengal Enna Seiya Vendum: வீட்டில் சந்தோஷம் பொங்க பெண்கள் இதை செய்தால் போதும்..

Manoj Krishnamoorthi July 05, 2022 & 11:00 [IST]
Veetil Santhosam Peruga Pengal Enna Seiya Vendum: வீட்டில் சந்தோஷம் பொங்க பெண்கள் இதை செய்தால் போதும்..Representative Image.

சந்தோஷமான இல்லம் அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும்,  லட்சுமி கடாட்சம் நிறைந்த நந்தவனமாக  மாறும். இதனாலே நம் வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள் வீட்டில் அழுதால் தரித்திரம் குறையாது  என்று முக்கியமாகப் பெண்கள் வீட்டில் அழக்கூடாது என்பதை ஆணித்தரமாகக் கூறுவர். 

ஆனால் எப்போதும் வீட்டில் சந்தோஷமாக வீட்டை அமைப்பது எப்படி (Veetil Santhosam Peruga Pengal Enna Seiya Vendum) என்று நம்  முன்னோர்கள் சொல்லவில்லை என நாம் நினைக்கிறோம் ஆனால் அவர்கள் மறைமுகமாக சில சம்பிரதாயங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

மங்காத மகிழ்ச்சி வீட்டில் சூழ இல்லத்தரசிகள் தினமும் செய்ய வேண்டிய விஷயங்களைக் காண்போம்.

சந்தோஷம் பொங்க செய்ய வேண்டியவை (Veetil Santhosam Ponga Pengal Seiya Vendum)

இல்லத்தரசி குடும்பத்தின் ஆணிவேர் என்று சொல்வதற்கு மாற்று கருத்து இருக்காது, வீட்டின் சந்தோஷம் வீட்டிலிருக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எப்போதும் விட்டில் மகிழ்ச்சியாக இருக்கலாம். பெண்கள் மனநிறைவுடன் இருப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும், அதற்கான வழிமுறைகளை காலங்காலமாக நம் முன்னோர்கள் செய்து பின்பற்றி தான் வந்தனர், ஆனால் காலப்போக்கில் நாகரீகம் என்ற பெயரில் நாம் மறந்துவிட்டோம்.

நாம் மறந்த விஷயத்தைக் கொஞ்சம் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த பதிவு வழி செய்யும், பெண்கள் வீட்டில் சௌபாக்கியம் என்று கூறலாம், அவளே வீட்டின் மகாலட்ட்சிமி ஆவாள். வீட்டின் மகாலட்சுமி மன அழுத்தத்துடன் இருந்தால் எப்படி மகிழ்ச்சி தோன்றும், அதற்கான ஒரு எளிய வழி தலையில் பூ சூடி கொள்வதாகும். 

பூவுக்கும் வீட்டில் சந்தோஷம் பொங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே யோசிக்கிறீர்கள். பண்டைக்காலத்தில் வீட்டில் பெண்கள் சிறு பூவாவது தலையில் வைத்து கொண்டு இருப்பார்கள் இதற்கு காரணம் மலரின் மிதமான வாசனை நமக்கு ஒரு பாசிட்டிவான எண்ண ஆற்றலைத் தரும். எனவே,  இதை மங்களகரமாகக் கருதி வீட்டிலுள்ள அனைத்து சுமங்கலிகளும் வைத்து வந்தனர்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால் வீட்டின் மகாலட்சுமி அலங்காரமின்றி அலங்கோலமாக இருந்தால் இன்பமான சூழல் உருவாகுமா...?  வகுடு எடுத்து தலை வாரி, தலையில் குங்குமம் வைப்பது  மன இறுக்கத்தைக் குறைக்கும்.  எனவே, நம் முன்னோர்கள் திருமணமான பெண்கள் தலையில் குங்குமம் வைப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

என்ன.... தலையில் பூச்சூடுவதாலும் பொட்டு வைப்பதாலும் வீட்டில் இன்பம் பொங்குமா..? என்ற உங்கள் ஐயத்துக்கு ஒரு சிறிய பதில்... நல்ல எண்ண ஓட்டம் நம்மை சுற்றி இருக்கும்போது நமக்கு தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் உருவாகும். இவை இரண்டும் வீட்டில் உதிக்கும் சர்ச்சைகளைச் சாதுரியமாகக் கையாளும் சரியான முடிவு எடுக்கும், பின் சந்தோஷமான இல்லறம் அமைக்கும். எனவே, தினமும் குங்குமத்தில் திலகமிட்டு தலையில் பூ வைத்து இருப்பது இன்பமான இல்லத்தை அளிக்கும். 

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: veetil santhosam peruga pengal enna seiya vendum, veetil santhosam peruga pengal enna seiyalam, veetil santhosam ponga pengal seiya vendum, veetil santhosam peruga, veetil santhosam ponga pengal, veetil lakshmi thanga enna seiya vendum 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்