பாரதம் எழுதிய நாயகன் விநாயக பெருமான், இறைவன் அனைத்துக்கும் முதற்முழு கடவுளாகும், எந்தவொரு முக்கிய காரியம் தொடங்கினாலும் அங்கு கணபதி வழிபாடு செய்து தான் நாம் ஆரம்பிப்போம். நம் சங்கடங்களைத் தீர்ப்பதில் கணபதி எப்போதுமே முதன்மை நிலையில் இருப்பார்.
விநாயக பெருமான் நாம் எந்த இடத்தில் உருவகம் செய்து வழிபட்டாலும் கருணையுடன் பக்தர்களின் அன்பை ஏற்றுக்கொள்வார்.விநாயகப் பெருமானுக்கு மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் திருவிழா 'விநாயகர் சதுர்த்தி' ஆகும். மிகவும் முக்கியமான விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகரை எந்த மந்திரம் சொல்லி வழிபட வேண்டும் என்பதைப் பற்றிக் காண்போம்.
விநாயகர் மந்திரம் (Vinayagar Manthiram in Tamil)
பக்தர் கூப்பிட்டால் உடனே வரும் கணபதி கருணை உள்ளம் படைத்த இறைவனாகும், கணபதியை வணங்க இதுதான் நேரம் என்று இதுவும் கிடையாது அதனாலே நாம் எந்தவொரு செயல் தொடங்கினாலும் அங்கு கணபதி இருப்பார். நவகிரக தோஷங்களைத் தீர்க்கும் வல்லமை கொண்ட கணேசனை மனமகிழச் செய்யும் மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓம் ஓங்காரமே போற்றி
ஓம் அஷ்ட கணபதியே போற்றி
ஓம் மூலவரே கணேசா போற்றி
ஓம் மஞ்சளில் ஆன மங்கலமே போற்றி
ஓம் சிவசக்தி மைந்தனே போற்றி
ஓம் கந்தனின் மூத்தோனே போற்றி
ஓம் முக்கடவளுக்கும் கடவுளே போற்றி
ஓம் சங்கடஹர சதுர்த்தியானே போற்றி
ஓம் நவக்ரஹ தோஷத்தினை கரைபவனே போற்றி
போற்றி போற்றி என போற்றிடுவேன் நித்தம் நித்தம் என் மூச்சு உள்ளவரை
ஓம் மூஷிக வாகனா போற்றி.
விக்கினங்களைத் தீர்க்கும் விக்னேஸ்வரனை நினைத்து விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் குளித்த பிறகு பூஜை அறையில் அமர்ந்து அல்லது விநாயகர் கோயிலுக்கு சென்று விநாயக பெருமானுக்கு அருகம்புல் படைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை எப்போது எல்லாம் விநாயகர் வழிபாடு செய்கிறோமோ உத்தாரணமாக மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி அல்லது தினமும் வீட்டில் பூஜை செய்யும்போது உச்சரிக்கலாம்.
வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் இந்த மந்திரத்தை சொல்லி வர நமக்கு மகிழ்ச்சியான வாழ்வை பிறக்க செய்யும் கணபதியின் கருணை உள்ளம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…