கடலூரில் மாவட்ட ஆட்சியர் கரும்பு கொள்முதலில் கறார் காட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க ரூ.72.38கோடி ஒதுக்கீடு செய்து
தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும், கரும்பின் நீளம் 6 அடிக்கும் குறையாமல் இருக்க வேண்டும், தடிமன் சற்றே அதிகமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கரும்பு கொள்முதல் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கீழ்க்கண்ட உறுப்பினர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழுக்களை தேவையான எண்ணிக்கையில் உருவாக்கியும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் விவசாய நிலங்களுக்குச் சென்ற ஆட்சியர் பாலசுப்ரமணியன், தோட்டத்தில் இருந்த கரும்புகளை டேப் கொண்டு அளக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அதிகாரிகள் தோட்டத்தில் இருந்த கரும்புகளை அளவொடுத்த அதிகாரிகள், 6 அடி உயரமுள்ள கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியனின் இந்த செயல், பல மாதங்களாக கரும்பை விளைவித்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பை கொள்முதல் செய்யலாம் என அரசு பிறப்பித்த உத்தரவால் நிம்மதி அடைந்த விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…