How to Grow Jasmine Plant in Tamil: வீட்டிலேயே எளிதான முறையில் பூத்துக்குலுங்கும் மல்லிகைப் பூ செடிகளை வளர்க்கலாம். குண்டு மல்லி பூவை எப்படி வாங்குவது முதல் அதை வளர்த்து பராமரிக்கும் முறைகள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.
செடிகளை வாங்கும் முறை
மல்லிப்பூ செடிகளை வாங்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கருத்தில் கொள்வது அவசியம் ஆகும்.
முதலில் மல்லிப் பூ செடி வாங்கும் போது, செடியின் தண்டு மென்மையாக இல்லாமல், சற்று தடிமனாக இருக்குமாறு வாங்க வேண்டும்.
தடிமனாக இருக்கும் தண்டுகளில் அதிக கிளைகள் வளரும்.
மல்லிப்பூ செடிகளை செம்மண் கலவையில் வைத்து வளர்க்க வேண்டும்.
எப்படி நடுவது?
இதில், மண் மற்றும் மாட்டுச்சாணத்தைப் பயன்படுத்தி வளர வைக்கலாம். குறிப்பாக செம்மண்ணில் அதிக அளவிலான மல்லிகைப் பூக்கள் வளரும்.
குண்டு மல்லிகைப் பூ அதிகம் வளர தேவையான உரங்கள்
குண்டு மல்லிப் பூவை அதிகமாக வளர வைப்பதற்கு உரங்கள் தேவைப்படுகின்றன. அப்படி பார்த்தால், ஒரு கிளையில் 10 பூக்கள் வளரும். இது போல அதிகப்படியான பூக்கள் வளர்ப்பதற்கு சில முறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
மல்லிகைப் பூ செடிகளை அதிகம் வளர்ப்பதற்கு தொழு உரங்கள் கொடுக்கலாம். இந்த தொழு உரங்களை வருடத்திற்கு மூன்று முறை கொடுக்க வேண்டும். அதன் படி, செடிகளை விதைக்கும் போது ஒரு முறை தொழு உரத்தை வைத்து நடலாம். அல்லது நன்றாக காய்ந்து போன மாட்டுச் சாணம் அல்லது ஆட்டுச் சாணத்தை வைத்து நட வேண்டும்.
அந்த செடி நன்றாக வளரும் சமயத்தில் தொழு உரம் இட வேண்டும். அப்படி செய்யும் போது நன்றாக செடிகள் வளர்க்க முடியும்.
மேலும், கவாத்து (கவாத்து என்பது செடிகளின் பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறை) செய்யும் போது தொழு உரம் செய்வதன் மூலம் செடிகளில் அதிக பூக்கள் வளர்வதைப் பார்க்க முடியும்.
குண்டு மல்லிப் பூ செடிகளை வளர்க்கும் முறை
சின்ன சின்னதாக வைக்கப்படும் மல்லிப்பூ செடிகளிலேயே அதிகமான அளவில் பூக்களை வளர்க்கலாம்.
தண்ணீர் பொருத்தமட்டில் அதிக அளவில் தேவையில்லை.
அதே போல, குண்டு மல்லிப் பூ செடிகளை வளர்ப்பதற்கு அதிகம் வெயில் தேவைப்படும். நிழலில் செடிகளை வைத்தால், செடி அதிக அளவிலான பூக்களைத் தராது.
இருந்தபோதிலும், மண் காயாத அளவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதிக அளவிலான தண்ணீரையும் விடக்கூடாது. அதிக அளவிலான தண்ணீரை விட்டால் வேர் அழுகக் கூடிய நிலைமைக்கு வரும்.
குண்டு மல்லிப் பூ செடி அதிக அளவிலான பூக்களைத் தருவதற்கு நைட்ரஜனை வழங்குவது அவசியம். அதற்கு, தட்டைப்பயிரைச் செடியை மல்லிப்பூ செடிக்கு பக்கத்தில் வளர்க்க வேண்டும். இப்படி வளர்க்கும் போது, சின்ன சின்ன தட்டப்பயிர்களை எடுத்து மல்லிப்பூ செடியின் மீது போட வேண்டும்.
இது போன்ற எளிமையாண முறைகளைப் பயன்படுத்தி, பூத்துக் குலுங்கும் மல்லிப்பூ செடிகளைப் பெறலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…