தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், சேலம், நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் 24,000 ஏக்கருக்கும் மேல் புகையிலை பயிரிடப்படுகிறது. தற்போது இதன் அளவு 13,500 ஏக்கராக சுருங்கி விட்டது.
இதை மீண்டும் குறைக்க தோட்டக்கலைத்துறை “மாற்று பயிர் உற்பத்தி” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை புகையிலை சாகுபடி தொடங்கும். அறுவடை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கும்.
இந்த நிலையில் மிளகு, வெங்காயம், கத்தரி, பூசணி போன்ற காய்கறிகளை புகையிலைக்கு மாற்றாகப் பயிரிட தோட்டக்கலைத் துறை ஊக்குவித்து வருகிறது. இதற்காக அரசாங்கம் அனுமதியுடன் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் வாயிலான காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், சேலம், நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்ட தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசு சலுகைகள் குறித்து விவசாயிகளிடத்தில் விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…