Kadagam Guru Peyarchi 2022 in Tamil: கடக ராசி அன்பர்கள் அனைவரும் மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரனை ராசிநாதனாக கொண்டவர்கள். நீங்கள் கடமை காரியத்தில் கச்சிதமாகவும், சோம்பலை விரும்பாதவராகவும், குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவராகவும், துப்பறியும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்.
மேலும் மற்றவர்களை வருத்தப்பட வைக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள். தெளிவான சிந்தனையோடும், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். உடல் நலம் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள். இப்படி இருக்கும் கடக ராசி (Guru Peyarchi 2022 Kadagam) காரர்களுக்கு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி குருப் பெயர்ச்சி நடக்க உள்ளது. அன்று குறு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுவதால் அவரின் பார்வை ராசி - தைரிய வீரிய மற்றும் ஸ்தானங்களின் மீது விழுகிறது.
நற்பலன்கள்
ரொம்ப நாளாக உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும். பணவரவு எதிர்பார்த்ததை போல வந்து சேரும். உங்களுடைய சாதூரியத்தால் வேலைகளை செய்து முடித்து பாராட்டுகளை பெருவீர்கள். அரசாங்க அதிகாரியர்களின் உதவி உங்களுக்கு தேவையான நேரத்தில் கிடைக்கும். வழக்குள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். விடா முயற்சிக்கான பலன்கள் வந்து சேரும்.
குடும்பம்
குடும்பத்தில் சந்தோசத்தின் காத்து வீசும். தம்பதியர்களுக்கு இடையில் மனம் திறந்து பேசுவதால் நடக்க இருக்கும் பிரச்சனைகள் தீரும். மேலும் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் மனக்கசப்பு நீங்கும். குழந்தைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். இருப்பினும் அவர்களின் நலனுக்காக கஷ்டப்பட வேண்டியது இருக்கும்.
தொழில்
தொழில் ரீதியாக உங்களுக்கு இருக்கும் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்பு அதிகரிக்கும், சரக்குகளை பத்திரமாக வைப்பது நல்லது. இரும்பு மற்றும் இயந்திரங்களை வைத்து வேலை செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. என்ன தான் முழுமையாக வேலை செய்தாலும் தெளிவு, கவனம் இல்லாமல் சற்று மெத்தனமாக இருப்பீர்கள். வேலைக்காக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாலும் அதை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
பெண்கள்
நல்லா லா பாயிண்ட் பிடிச்சு பேசுவதால் நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அதே போல் தேவையில்லாமல் மற்றவர்களை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. மன உளைச்சல், உடற்சோர்வு போன்ற விஷயங்களால் சற்று துவண்டு போய் இருப்பீர்கள். அது உங்களுக்கு நல்லது இல்லை எனவே உங்களை சுறுப்பாக மாற்றிக்கொள்வது நல்லது.
மற்றவை
மாணவர்களுக்கு படிப்பை பற்றிய கவலை அதிகரிக்கும், இருப்பினும் வெறியுடன் படித்து நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நன்மை நாடாகும் காலம் இதுவே. உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் மற்றும் இன்னும் ஆர்வத்துடன் பணியை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்
ஒவ்வொரு திங்கட்கிழமையும் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும். பிறகு தினமும் ஓம் ஸ்ரீமங்களாம்பிகாய நம என்னும் மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். நல்லததே நடக்கும், அப்படி நீங்கள் நினைத்தது நடக்க விலை என்றால் வருந்தாமல் நம்பிக்கையுடன் இருங்கள். அந்த காலம் சீக்கிரம் வரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…