"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்னும் திருக்குறளை முன்நிறுத்தி ஒரு மகன் தன் தந்தைக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய முக்கிய கடமை யாதனின் அவன் முறையாக செய்யும் தர்ப்பணம் ஆகும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை திதி உகந்த நேரமாகும். இவ்வாறு தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆன்மாவை சாந்தி கொள்ள செய்யும், மோட்சம் பெற்ற ஆன்மா நமக்கு ஆசீர்வதிக்கும்.
பித்ரு கடமைகள் செய்ய அமாவாசை திதி உகந்த தினம் என்பதுபோல் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது மிகச்சிறந்த்தது. ஒவ்வொரு ராசியினரும் மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரங்களைக் காண்போம்.
12 ராசியின் மகாளய அமாவாசை பரிகாரம் (Mahalaya Amavasya Pariharam )
1. மேஷம்
முன்னோர் செய்ய முடியாத நிலையில் வீட்டில் தந்தைக்கு அல்லது வயது முதிர்ந்த பெரியோர்களின் மனதிற்கு விருப்பமான பொருளை மகாளய அமாவாசை அன்று அளிக்கலாம். இவ்வாறு முன்னோர்களின் ஆசையை அவர்கள் பூவுலகில் இருக்கும்போதே நிறைவேற்றுவதால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்.
2. ரிஷபம்
மகாளய அமாவாசை தினத்தன்று நீங்கள் முதியவர்களுக்கு அல்லது முதியோர் இல்லத்திற்கு தேவையான உணவு, உடையை போன்றவை உங்களால் முடிந்த அளவு செய்யும்போது பித்ரு தோஷம் இருந்தாலும் நிவர்த்தி ஆகும்.
3. மிதுனம்
பொதுவாக மனிதர்களை விட மற்ற ஜீவராசியின் மீது நம்பிக்கை கொண்ட உங்களுக்கு முன்னோர் ஆசி பெற நீர்நிலையில் இருக்கும் மீன்களுக்கு பொரி அளிப்பதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.
4. கடகம்
உங்களின் இலகிய மனதிற்கு பெரும்பாலும் மற்றவர்களுக்கு உதவும் குணத்திற்கு முன்னோர் ஆசி எளியதாக கிடைக்கும். நீங்கள் மகாளய அமாவாசை அன்று உணவு உற்பத்தி பெருக்கும் வகையிலான விதை, உரம் போன்ற விவசாய பொருட்களை தானம் அளிப்பதால் அறியாமல் செய்த பாவங்கள் அகலும்.
5. சிம்மம்
சிவனின் ஆசிய நீங்கள் எளிதில் பெற மகாளய அமாவாசை அன்று சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை, ஆடை தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் தானம் அளிப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
6. கன்னி
பித்ரு தோஷத்தால் கஷ்டங்களை சுமக்கும் கன்னி ராசிக்காரர்கள் மகாளய அமாவாசை தினத்தன்று இரத்த சொந்தத்திற்கு உதவி செய்வதால் முன்னோர்களின் ஆசி பெறலாம்.
7. துலாம்
யதார்த்தமான மனதைக் கொண்ட நீங்கள் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு அன்னதானம் அளிப்பதால் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும்.
8. விருச்சிகம்
தர்ம நெறியில் வாழும் நீங்கள் மகாளய அமாவாசை தினத்தன்று எறும்புகளுக்கு சர்க்கரை அளிப்பதால் பித்ரு தோஷம் விலகி முன்னோர்களின் ஆசியை பெறலாம்.
9. தனுசு
மகாளய அமாவாசை தினத்தில் குழந்தைகளுக்கு புத்தாடை அளித்து அவர்களின் மனதை மகிழ்ச்சி அடைய செய்வதால் பித்ரு ஆசி கிடைக்கும்.
10. மகரம்
மகாளய அமாவாசை அன்று சிவ ஸ்தலம் சென்று தீபம் ஏற்றி இறைவனை வணங்கி ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதால் கர்ம வினைகள் விலகி புண்ணியம் கூடும்.
11. கும்பம்
வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்ட உங்களுக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்க உங்களால் முடிந்த அளவு ஆதரவற்ற மக்களுக்கு ஆடை, போர்வை, உணவு போன்றவை தானமாக அளிக்கவும்.
12. மீனம்
மகாளய அமாவாசை தினத்தன்று பச்சைக் காய்கறிகளை தானமாக அளிப்பதால் முன்னோர்கள் மனம் மகிழ்ச்சி அடையும். செல்வம் செழிப்பாக வாழ வழி கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை மகாளய அமாவாசை தினத்தன்று 12 ராசியினரும் செய்வதால் நம்மை மண்ணில் ஜனிக்க வைத்து நம் நலனுக்காக வாழ்ந்து மறைந்த பித்ரு ஆசி கிடைக்கும்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…