Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mahalaya Amavasya Tharpanam : மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் விலகும்..!

Manoj Krishnamoorthi September 20, 2022 & 11:30 [IST]
Mahalaya Amavasya Tharpanam : மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் விலகும்..!Representative Image.

நம்மை மண்ணில் ஜனிக்க வைத்த முன்னோர்களுக்கு நமக்கு தெரியாமல் நம்மை அறியாமல் செய்த செயல் தோஷமாக மாறக்கூடும். அந்த பித்ரு தோஷம் நீங்க நாம் அமாவாசை அன்று திதி தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த வருடம் புரட்டாசி மாதம் (25 செப்டம்பர் 2022 , ஞாயிறு) அன்று வரும் அமாவாசை மகாளய அமாவாசை ஆகும். இந்த தினத்தில் சூரியபகவானின் முன் கீழ்வரும் பரிகாரத்தை செய்தல் வேண்டும். 

மகாளய அமாவாசை பரிகாரம் (Mahalaya Amavasya Tharpanam Procedure)

இறந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கடமைகள் என்று செய்வது அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதாகும், ஆனால் நவ நாகரிகத்தில் அதை மறந்துவிடுகிறோம் அது பின்னாளில் பித்ரு தோஷமாக மாறுகிறது. எனவே நம் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்கள் இந்த பூவுலகத்தை விட்டு செல்ல வழிசெய்ய முறையாக தர்ப்பணம் செய்தல் வேண்டும். பல நாட்களுக்கு முன் இறந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தன்று அல்லது வருடப்பிறப்பு அன்று  தர்ப்பணம் செய்வது அவர்கள் ஜனோ லோகத்தில் (பித்ரு லோகம்)ஆசி பெற தூண்டும்.  

பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு, அதுவும் மகாளய அமாவாசை தினத்தன்று செய்வது மிகவும் சிறந்தது ஆகும். இப்போது நம் முன்னோர்களுக்கு எப்படி மகாளய தினத்தில் தர்ப்பணம் செய்வது என்பதை பற்றி  காண்போம். ஒரு திறந்த வெளியில் தெற்கு திசையைப் பார்த்தபடி அமர்ந்து ஒரு விளக்கு ஏற்றி முன்னோரை நினைத்து வணங்குதல் வேண்டும். பின்னர்  புரோகிதர் வைத்து முறையான வேதங்கள் ஓதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இறுதியாகத் தர்ப்பணம் முடிந்த பிறகு பசு, நாய், காகம், எறும்பு போன்ற ஜீவ ராசிகளுக்கு உணவளித்து, அருகில் இருக்கு ஏழை எளிய  மக்களுக்கு எள்ளு, கருப்பு உளுந்து, உப்பு, வெல்லம், ஆடை போன்ற தானமாக அளித்தல் வேண்டும். 

இவ்வாறு நாம் மகாளய தினத்தில் தர்ப்பணம் செய்யக் காரணம் நம் முன்னோர்கள் புரட்டாசி மாத மகாளய பட்சத்தில் ஜனோ லோகத்தில் இருந்து நம்மை காண பூமிக்கு வந்து பின்னர் தை மாதத்தில் திரும்ப செல்வர். நாம் செய்யும் பித்ரு தர்ப்பணம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்து நம்மை ஆசீர்வதிக்கும். 


 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்