Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகு கேது காயத்ரி மந்திரம்.. எத்தனை முறை சொல்ல வேண்டும்? | Rahu Ketu Gayatri Mantra in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ராகு கேது காயத்ரி மந்திரம்.. எத்தனை முறை சொல்ல வேண்டும்? | Rahu Ketu Gayatri Mantra in TamilRepresentative Image.

நம்மில் பலரும் பல முயற்சிகள் செய்து ஒரு விஷயத்தை ஆரம்பித்து ஏதாவதொரு காரணத்தினால் காரியம் பாதியில் நின்று விடும் அல்லது முடிக்கும் தருணத்தில் தடைபட்டு போகும். எடுத்துக்காட்டாக, திருமண தடை, குழந்தை தடங்கல், வேலை கிடைப்பதில் தடங்கல், சொந்த வீடு கட்டுவதில் தடங்கல் அல்லது புதுத்தொழில் தொடங்குவதில் தடங்கல் என்று அடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம். 

இதற்கு முக்கிய காரணம் சர்ப்ப தோஷம் என்றழைக்கப்படும் ராகு கேது தோஷம் தான். ஜோதிட ரீதியாக சர்ப்ப தோஷம் என்பது மிக முக்கியமான ஒரு தோஷம் ஆகும். ராகு கேது எந்த இடத்தில், எந்த கிரகங்களுடன் உள்ளதோ அந்த கிரகங்களை தன் வசம் செய்து விடும் ஆற்றல் பெற்றவை. ராசி அதிபதியை, நட்சித்திர அதிபதியை என அனைத்தையும் தன் வசம் செய்து கொள்ளக் கூடியவை. 

மேலும் தன்னை பார்க்கும் கிரகங்களையும் தன் வசம் செய்து விடும் வல்லமை பெற்றது தான் இவ்விரு கிரகங்களும். இதனால் யதார்த்தமாக நம்முடைய தினசரி வாழ்வில் நடக்க வேண்டிய பல விஷயங்களில் பிரச்சனைகளை தரக்கூடியது. எனவே, ராகு கேதுவுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை கூறி வருவதன் மூலம் அவற்றின் பாதிப்பில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம். 

ராகு காயத்ரி மந்திரம்:

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி மந்திரம்: 

ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி 
தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்

எப்படி சொல்ல வேண்டும்?

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோயிலில்களில்  உள்ள நவக்கிரக சன்னதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள்ளாக சென்று, ராகு பகவானுக்கு சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பித்து, கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுப் பதார்த்தத்தை நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணை தீபம் ஏற்றி ராகு பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். 

அதேபோல், கேது பகவானுக்கும் சனிக்கிழமைகளில் காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளாக சென்று, மலர்கள் சமர்ப்பித்து, கொள்ளு நைவேத்தியம் வைத்து, நெய்தீபம் ஏற்றி கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் கேது பகவானின் தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரம் முதல் அதிகபட்சம் 27 வாரம் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற இயலும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்