சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரிய ஒளியால் ஏற்படும் பூமியின் நிழலிற்குள்ளாக சந்திரன் கடந்து செல்லும் நிகழ்வு. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணம் வரும் மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது. பொதுவாக அறிவியல் ரீதியாக ஏற்படும் இந்த நிகழ்வுகளுக்கு ஜோதிட ரீதியாக அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தவகையில், கிரக நகர்வினால் இந்த 4 ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
சந்திர கிரகணத்தின் போது கடக ராசியினர் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தடை, தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் சண்டை வரலாம். பணத்தை கொடுத்த ஏமாற வாய்ப்புள்ளது. எனவே புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
சிம்மம்
நேரம் சுத்தமாக சரியில்லாததால், இந்த சந்திர கிரகணத்தின் போது சிம்ம ராசியினர் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் எச்சரிக்கை வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்தவொரு முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க | சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்து முழுத்தகவல்.. | Chandra Grahanam 2023 Timings
ரிஷபம்
ரிஷப ராசியினர் சந்திர கிரகணத்தின்போது யாருடன் பேசுவதாக இருந்தாலும் வார்த்தையில் நிதானமும் கவனமும் தேவை. ஒருவேளை அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டால் உறவுகள் பிரியும் சூழ்நிலை வரும். ஒருசிலர் குடும்ப சூழலை சமாளிக்க கடன் வாங்க வாய்ப்புள்ளது. வேலையிலும் ஈடுபாடு காட்டாமல் இருப்பீர்கள். இதனால் வேலை பறிபோகும் சூழலும் எழலாம்.
மேஷம்
சந்திர கிரகணத்தின்போது மேஷ ராசியினர் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இதனால் தவறான முடிவுகளை கூட எடுக்க தயங்கமாட்டீர்கள். பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கும். புதிய நபர்களால் வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாகன பயணத்தின்போது எச்சரிக்கை வேண்டும். நண்பர்களுக்கு இடையில் கருத்துமோதல் வரலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…