சனி வக்ரம் என்றால் என்ன?
ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக சனி கிரகம் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இந்த சனி வக்ரம் என்பது சனி கிரகமானது எதிர் திசையில் அதாவது பின்நோக்கி நகர்ந்தால் அதை 'சனி வக்ர பெயர்ச்சி' என்பர். இவ்வாறு சனி வக்ர நிலையில் இருக்கும் போது இருக்கின்றன துன்பங்களும் மேலும் அதிகரிக்கும். ஆனால், ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் சனி பகவனால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
சனி வக்ர பெயர்ச்சி 2023 பரிகாரங்கள்:
➥ சனி வக்ர நிலையில் இருக்கும் ராசியினர் அடிக்கடி சிவன் கோவிலுக்குச் சென்று இறைவனையும், அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, கடைசியாக நவகிரகங்களை வழிபட்டு வரவும். பின்னர், சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்யவும்.
➥ வக்ர சனிக்காலத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
➥ சனியின் வக்ர பெயர்ச்சியால் ஏற்படும் தீவினைகளிலிருந்து தப்பிக்க, சனிக்கிழமை நாளில் ஒரு வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய்யை நிரப்பி, அதில் உங்க முகத்தை பார்க்கவும். அதன்பின்னர், அந்த எண்ணெய்யை தானம் செய்துவிடுங்கள்.
➥ சனி வக்ர பெயர்ச்சியால் ஏற்படும் பின்னடைவுகளிலிருந்து விடுபட உங்கள் வலது கையின் நடுவிரலில் இரும்பினால் ஆன மோதிரத்தை அணிவது நல்லது. முடிந்தால் குதிரையின் லாடத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மோதிரத்தை பயன்படுத்துவது மிகவும் நன்மையைத் தரும்.
➥ சனி வக்ர காலத்தில் தாதுரா வேர் அணிந்து கொள்வதன் மூலம் சனியின் கெடுபலன்கள் பாதியாக குறைந்து நல்லருள் பெற முடியும். இதனை சனிக்கிழமைகளில், சனி ஹோரையில் நீங்கள் ஒரு கயிற்றில் கட்டி உங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம்.
➥ மிக மிக எளிய பரிகாரம் என்று பார்த்தால் ஏழை, எளியோருக்கு உதவுவது மட்டுமே. சனி பகவானின் கெடுபலங்களிலிருந்து தப்பிக்க உங்களால் முடிந்த வரை ஏழை, எளியோருக்கு தான, தர்மம் செய்யுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…