எலக்ட்ரிக் பைக்கள் விற்பனை தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெட்ரோல் விலை ஏற்றமும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்தியாவில் e- வாகனங்களில் அதிகமானவர்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் கவர்ந்துள்ளது. அதுவும் ஒருசில நிறுவனங்களின் வாகனங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமான விற்பனை செய்துள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் ஏத்தர் நிறுவனம் ஓலாவை விட அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஓலாவை விட 3 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது, இதனால் ஓலா நிறுவனத்தின் இலக்கு அதிகரிக்குமாம்.
ஏத்தர் பெங்களூரை மையமாகக் கொண்ட நிறுவனம் ஆகும், 2021 டிசம்பரில் செய்த விற்பனையை விட 389% அதிகமாக 2022 விற்பனை செய்துள்ளது. ஏத்தர் விற்பனைக்கு உபயோகித்த யுத்தி வாடிக்கையாளரை வெகுவாக கவர்ந்துள்ளது.
தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்க 14 நகரங்களில் அனுபவ மையங்கள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், ஃபைனான்ஸிங் ஆப்சன்கள் போன்றவை வாடிக்கையாளரை ஈர்த்தாக நம்பப்படுகிறது. மேலும் 2023 இல் விற்பனையை அதிகரிக்க 8000-9000 ஸ்கூட்டரகளை தயாரிக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…