WFH : உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அணைத்து நிறுவனக்களும் வொர்க் ப்ரம் ஹோம் வழங்கியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 2 மாநிலங்களில் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
அதன்படி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில் சாலையில் மழைநீர் ஓடியது. இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சூறைக்காற்று வேகமாக வீசியதால் மரங்கள் சாலையில் விழுந்தது. இதனையடுத்து அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
வொர்க் ப்ரம் ஹோம்
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி (வொர்க் ப்ரம் ஹோம்) செய்யலாம் என தெரிவித்துள்ளது.மேலும் இதற்க்கு கால அவகாசம் எதும் தெரிவிக்கவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை வீட்டில் இருந்து பணி செய்யுங்கள் என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…