Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மத்திய அரசின் புதிய அறிவிப்பு..... புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமோக திட்டம்..!

Gowthami Subramani October 17, 2022 & 11:00 [IST]
மத்திய அரசின் புதிய அறிவிப்பு..... புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமோக திட்டம்..!Representative Image.

பிஎல்ஐ என்பது Production-Linked Incentive Scheme ஆகும். அதாவது உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை எனப்படும் இந்த திட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளை விரிவுபடுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம், அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக முடியும். எனவே, இதன் மூலம் இன்னும் சில துறைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான ஊக்கத் தொகையின் அளவை 35,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தவும் ஆலோசனை செய்து வருகிறது.

அதன் படி, இந்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகிய திட்டத்தில், ஆட்டோமொபைல், ஃபார்மா, டெக்ஸ்டைல்ஸ், உணவு உற்பத்தி உட்பட 14 துறைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இத்துடன் மேலும் தொலைத் தொடர்பு, தடுப்பூசி தயாரிப்பு, தோல் பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சரான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும், பியூஸ் கோயல் அவர்கள் தெரிவித்ததாவது முன்னதாகவே, 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு துறைகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விரிவுபடுத்தும் திட்டத்தின் மூலம், உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும் என இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அது மட்டுமல்லாமல், இதில் புதிய முதலீடு அதிக அளவு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அதிகம் உருவாகு எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்