ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியதால், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
வரும் வாரம் தீபாவளி வருவதை ஒட்டி, தங்கம் வாங்க பெரும்பாலானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரத்தின் இறுதியில், சவரனுக்கு ரூ.360 குறைந்து இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று அதிகமானதால், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 17 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.10 அதிகரித்து, 4,700 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து 37,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தூய தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு 5,102 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,816 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.60.70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.60,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…